ஜோதிட ராசி பலன்கள் ஒரு டுபாக்கூர் சமாச்சாரமா?
வாசக
அன்பர்களுக்கு வணக்கம். நேற்று விஜய் டி.வி.யில் நீயா? நானா?
நிகழ்ச்சியில் ஒரு சுவாரஸ்யமான விவாதம் நடந்து கொண்டு இருந்ததை ஒளி
பரப்பினார்கள். இந்த 2012 - ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் , எப்படி
இருக்கும் என்பதை பற்றி. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பிரபலமான
ஜோதிடர்கள் அந்த விவாதத்தில் கலந்து கொண்டு தங்கள் கணிப்புக்களை
கூறிக்கொண்டு இருந்தார்கள்...
ஜோதிடர்களிடமும் சில முரண்பாடுகள், அவரவர் கணிக்கும் முறை என்று - நகைச்சுவையும் , சுவாரஸ்யத்துக்கும் குறைவில்லாமல் நன்றாகவே நடந்து கொண்டு இருந்தது.
வெறுமனே
ராசியை மட்டுமே வைத்துக் கொண்டு - அவரவருக்கு இந்த மாதிரி நடக்கும்,
நடக்காது என்று அவர்கள் சொல்வதை வைத்து வேடிக்கையாகத் தான் இருந்தது.
பொறுத்துப்
பொறுத்துப் பார்த்த ஒரு ஜோதிடர் கடைசியில் போட்டு உண்மையை உடைத்தார்.
"இவங்க சொல்ற எதுவுமே சரி இல்லை. லக்கினம் எதுன்னு தெரியாம - ராசியை
மட்டும் வைச்சுக்கிட்டு பலன் சொல்லக் கூடாது. இது இங்கே வந்து இருக்கிற
எல்லா ஜோதிடர்களுக்கும் தெரியும்". எல்லா ஜோதிடர்களும் ஒரு நிமிடம் அரண்டு
போயிட்டாங்க.. அவங்களுக்கும் தெரிஞ்ச ஒரு அடிப்படை விஷயம்தான்...
ஆரம்பத்துலேயே சொல்லி இருந்து இருக்கலாம்....
சார், எந்த ஜோதிடரும் பலன் சொல்வது - முதலில் அவர் லக்கினம் , மற்றும்
பிறந்த ஜாதகம் வைத்து அங்கு இருக்கும் நவ கிரக நிலைகளை வைத்து - தற்போது
கோசார ரீதியாக கிரகங்கள் எங்கு இருக்கின்றது என்பதைப் பொறுத்து மட்டுமே.
நாள் இதழ்களில் வரும் ராசி பலன்கள் - அனைத்தும் பொதுவான பலன்களே.
நம்
வாசகர்களுக்கு இதை பலமுறை நான் நினைவுப் படுத்தி இருக்கிறேன். நடப்பு தசா ,
புக்தி மோசமாக இருந்து - பேப்பரில் நல்ல விதமாக போட்டு
இருக்கிறார்களே....என்று உடனடியாக எந்த ஒரு அவசர முடிவுக்கும் வந்து விடாதீர்கள். பிறந்த ஜாதகப்படி நல்ல தசை ஓடிக்கொண்டு இருந்தால் - கோச்சார ரீதியாக மோசமாக இருந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம்.
அதைப்
போலவே மோசமான தசை நடந்தாலும் - கோச்சார ரீதியாக நல்ல விதமாக இருந்தால் ,
ஓரளவுக்கு அந்த காலம் சமாளிக்க கூடிய அளவில் இருக்கும்.
எந்த
பெரிய முடிவுகளும் எடுக்கும் முன்பு , ஜோதிடத்தில் நம்பிக்கை இருப்பவர்கள்
- உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தை , நல்லதொரு ஜோதிடரிடம் காண்பித்து அதன் படி
நடந்து கொள்ளவும். ராசி பலன்கள் என்று கூறப்படும் அனைத்தும் பொதுவான
பலன்களே. அதை மட்டுமே முழுக்க நம்பி , எந்த பெரிய காரியத்திலும் இறங்க
வேண்டாம்.
பொதுவில் மனிதன் துன்பத்தில் சிக்கி சீரழியும்போது தான் - ஜோதிடம் பக்கமே
திரும்புகிறான். நல்ல ஜோதிடர்கள் அவனுக்கு ஆறுதல் அளிக்கும் படி, நம்பிக்கை
அளிக்கும்படி பேசி , உரிய காலம் வரை பொறுத்துக் கொள்ளவும் , நற்பலன்கள்
பெற தகுந்த இறை வழிபாடு பரிகாரங்களை சொல்லியும் - வழி நடத்துவார்கள்.
கெட்ட
பலன்கள் நடக்கும் என்று தெரிந்தாலும், அதை பட்டவர்த்தனமாக உடைத்து சொல்ல
மாட்டார்கள். இந்த கால கட்டத்தில கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள் என்று
பொத்தாம் பொதுவாக கோடிட்டு காட்டுவர்.
நேற்று
வந்து இருந்த ஒவ்வொரு ஜோதிடரும், மிக நல்ல முறையில் பலன்கள் சொல்லி,
அவரவர் இருக்கின்ற ஏரியாவில் அவ்வளவு பிரபலமானவர்கள். ஆனால் , விவாதத்தில்
பங்கு கொண்டு இருந்த பொது ஜனங்கள் எல்லோரும் - ஜோதிட நம்பிக்கை மட்டும்
கொண்டவர்கள் இல்லை. ஜோதிடர் வேண்டாம்னு சொன்னாலும், என் மனசு வீடு
கட்டுன்னு சொன்னா , நான் கட்டுவேன் சார்னு ஒரு அம்மா சொன்னாங்க....!
மிக சரியான வார்த்தை...
ஐயா, TV ல ஒரு டாக் ஷோ - புத்தாண்டு ஸ்பெசல் நிகழ்ச்சி-
கலந்துக்கிட கையை பிசஞ்சுக்கிட்டு , கண்ணீர் விட்டு , கலங்கி -
வாழ்க்கையில திக்கு தெரியாம நிற்க்கிறவங்க யாரும் இந்த புரோகிராமுக்கு
போகப் போறது இல்லை.
ஓரளவுக்கு மகிழ்ச்சியா, சந்தோசமா இருக்கிறவங்க - ஜோதிடம் பக்கமே வரப்
போறது இல்லை.கல்யாணம் மாதிரி ரொம்ப பெரிய விஷயம் தவிர ஜோதிடம் அவங்களுக்கு
தேவையே இல்லை. நேற்று வந்தவங்களும் அந்த மாதிரி தான் ஜோதிட நம்பிக்கை
இருக்கு..... ஆனா இல்லைங்கிற மாதிரி ...
சரி
விடுங்க.... அவங்கள்ளே ஒரு சிலர் சில ஜோதிடர்கள் பேசுறதைப் பார்த்து -
நக்கலா , நமுட்டு சிரிப்பு சிரிச்சதுதான் , கொஞ்சம் ஒரு மாதிரி இருந்தது.
சரி, விடுங்க.... சந்தோசமா இருந்திட்டுப் போகட்டும். கடவுள் எல்லாரையும்,
இந்த மாதிரி சந்தோசமா வைச்சு இருக்கணும்...!
அவங்க
நினைக்கிறதும் சரிதான். எந்த காலத்துலே...இருக்கிறோம்? விஞ்ஞானம் வளர்ந்து
உச்சத்தில இருக்குது..! கூடிய சீக்கிரம் எல்லா புதிர்களுக்குமே விடை
கிடைக்கப் போகுது... இப்போ வந்துக்கிட்டு ராசி - ஜாதகம்னு எல்லாம்
பேசுறாங்க பாருங்கன்னு திங்க் பண்ணி இருந்து இருப்பாங்களோ...?
சரி, நிஜமாவே இந்த ஜோதிடம் , ஜாதகம் எல்லாம் உண்மை தானா? நம்மோட வாசகர்களுக்கு , என்னுடைய பதில் என்னன்னு நான் சொல்லாமலே தெரியும்.
என்னுடைய பழைய பதிவுகளை படிச்சு இருக்கிறவங்களுக்கு தெரியும்....
ஒருவரது ஜாதகம், வாழும் வீடு , சுய எண்ணங்களும் அவற்றின் செயல்வடிவமும் - இந்த மூன்றும் தான் ஒரு மனிதனின் வாழ்வை தீர்மானிக்கிறது...
இதில் ஜோதிடமும், வாஸ்துவும் - பெரிய பம்மாத்து விஷயங்களாக மாறிவிட்டது - ஜோதிடம் அரை குறையாக தெரிந்த ஜோதிடர்களால் தான்.
ஒழுங்க
படிக்க முடியாம, வேற எந்த வேலையும் செய்ய திறமை இல்லாம, ஒரு ஏமாத்து
வேலையா ஜோதிடம் பக்கம் வந்தவங்க கூட அதிகமா இருக்கிறாங்க...!
ஒன்று
- இவற்றை சரியாக கணிக்க கூடிய வல்லுனர்களை நாட வேண்டும்... இல்லையா....
நீங்களே இவற்றின் அடிப்படையை தெரிந்து கொள்ள ஆரம்பியுங்கள்... அதன் பிறகு
உங்களுக்கே புரிய ஆரம்பிக்கும்... சுய
ஜாதகம், தங்கி இருக்கும் வீட்டின் வாஸ்து - இதில் ஒன்று நன்றாக இருந்தாலே ,
மீதி இரண்டையும் நல்ல விதமாக மாற்றும் சக்தியாக அது இருக்கிறது....
ஜோதிடமோ
, வாஸ்துவோ கூட வேண்டாம்... இறைவனை முழு மனதுடன் நம்பி - நீங்கள்
எடுக்கும் ஒவ்வொரு முயற்சியையும் கவனத்துடன் எடுத்து வந்தாலும் , நீங்கள்
நினைத்ததை சாதிக்கலாம்.
வீட்டில்
தினமும் தீபம் ஏற்றி - சந்தியா வேளைகளில் காலையும், மாலையும் அகர் பத்தி
வாசனை நிரம்பும் வீட்டில் , ஒளியும் மணமும் நிறைந்து இருப்பது போல - மன
மகிழ்ச்சியும், உடல் நலமும் நிரம்பி இருக்கும். தினமும் மாலை கவிந்து இரவு
தொடங்கும் முன்பு பத்தி காட்டப்படும் வீட்டை, எந்த துர் ஆவிகளும்
நெருங்காது.
தினமும்
ஏதாவது ஒரு வேருக்கு தண்ணீர் விடுவதை நித்திய கடமையாக கொள்ளுங்கள். அது
ஒரு துளசி செடியாக இருக்கலாம், அல்லது உங்களின் நட்சத்திர விருட்சமாக
இருக்கலாம். அல்லது உங்கள் வீட்டில் வளரும் வேப்ப மரமாக கூட இருக்கலாம்..
வீட்டுக்கு
யார் ஒருவர் வந்தாலும் - வந்தவருக்கு அவர் உள்ளே நுழைந்ததும்,
குடிப்பதற்கு குடி தண்ணீர் கொடுங்கள். இதை எந்த காலத்திலும் மறக்காமல்
செய்யுங்கள்..!
உங்கள் வாழ்க்கை நிச்சயம் பலமடங்கு மேம்படும்...!
மற்றபடி , இந்த புது வருடம் - மனதில் நீங்காத மகிழ்வான நினைவுகளை நம் ஒவ்வொருவருக்கும் அளிக்கட்டும்..!
No comments:
Post a Comment