(அறிஞர் அண்ணா அவர்கள் இன்று இருந்தால் என்ன பேசுவார்?)
(அறிஞர் அண்ணா அவர்கள் இன்று இருந்தால் என்ன பேசுவார்?)
என் பெயரால் ஒரு கட்சி - அண்ணா திமுக; என் உருவம் தாங்கிய கொடி _ அ.இ.அ.தி. மு.க. கொடி; அதற்கென்று ஒரு பத்திரிகை டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.
தோலைக் கடித்து, துருத்தியைக் கடித்து, ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனைக் கடித்த கதை கண்டு திடுக்கிட்டுப் போனேன். மண் சோறு சாப்பிட்டீர்கள். மாள முடியாத பசி போலும் என்று நினைத்தேன். யாகம் நடத்தியதாகக் கேள்விப்பட்டேன். தோட்டத்துக்குள்தானே _ தனி நபர் பிரச்னை என்று தள்ளி விட்டேன்.
சித்ரா பவுர்ணமியன்று வீட்டில் விளக் கேற்றி இருளை விரட்டுங்கள் என்று வெளி வந்த ஓர் அறிக்கையைப் பார்த்துத் தலையில் அடித்துக் கொண்டேன்.
விநாயக சதுர்த்திற்கு வாழ்த்துத் தெரி வித்தாய்; நான் எழுதிய களி மண்ணும் கையுமாக (திராவிட நாடு 12.9.1942) என்ற கட்டுரையைப் படிந்திருந்தால் அல்லவா - இந்த வாழ்த்தை எழுதும்போது தயக்கம் ஏற்பட்டு இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்திற்காக எத்தனை எத்தனைக் கூட்டங்களில் பேசி இருப்பேன், எத்தனை எத்தனை கட்டுரைகளை எழுதித் தள்ளியிருப்பேன்! - மாநாடுகள் கூட்டித் தீர்மானங்களை நிறைவேற்றியிருப்பேன், பேரணிகளை நடத்தியிருப்பேன் - போராட்டங்களை நடத்தியிருப்பேன்!
அந்தச் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்ற என் பெயரை வைத்துக் கொண்ட கட்சியின் பொதுச் செயலாளர் உச்சநீதிமன்றம் சென்று தடை வாங்குகிறார் என்றால் தலையில்தான் அடித்துக் கொள்ள வேண்டியவன் ஆனேன். ராமர் பாலமாம். அதை இடித்தால் இந்துக்கள் மனம் புண்படுமாம். அட தங்கச்சி! என் பெயரைக் கட்சியின் பெயரில் வைத்துக் கொண்டா இந்த மோசடியைச் செய்ய வேண்டும்?
இராமாயணத்தைப் பற்றி தந்தை பெரியாரும், நானும் எழுதியதை, பேசியதைப் படித்து பார்த்ததுண்டா, அந்த நூல்களைக் கையால் தொட்டதுதான் உண்டா?
இரா.பி. சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார் ஆகியோருடன் இராமாயணத்தைக் கொளுத்துவது குறித்து நான் விவாதம் செய்த வரலாறு உமக்குத் தெரியுமா? நீதிதேவன் மயக்கம் கேள்விப்பட்டதுண்டா?
வரலாறு தெரிந்தவர்கள் யாராவது உமது பக்கத்தில் வைத்துக் கொண்டதுண்டா?
இராமாயணம் என்பது ஆரியர் திராவிடர் போராட்டம் என்பதுபற்றியெல்லாம் ஏதாவது தெரியுமா?
உமக்கு எப்படித் தெரியும்? அப்படியே தெரிந்தாலும் நீ ஆரியத்தின் பக்கத்தில்தானே நிற்பாய்? அந்த அடிப்படையில் தான் இராமன் பாலத்தை இடித்து சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று வழக்குத் தொடுத்திருப்பாயோ?
தங்கச்சி, உன் அறிக்கை ஒன்றை உமது கட்சி ஏட்டில் (29.10.2009 _ நமது எம்.ஜி.ஆர். பக்கம் 1-9) படித்துப் பார்த்தேன்.
ஒவ்வொரு பிறப்பிற்கும் ஒரு அர்த்தம் உண்டு. ராமர் பிறந்தார். ராமரின் பிறவிப் பயன் என்ன? தீய சக்தியான ராவணனை அழிப்பது தான். ராமனின் பிறவிப் பயன் கிருஷ்ணன் பிறந்தார். கிருஷ்ணனுடைய பிறவிப் பயன் என்ன? கம்சன் என்னும் அரக்கனை ஒழிப்பது தான் _ அழிப்பதுதான். கிருஷ்ணரின் பிறவிப் பயன். சத்ய பாமாவின் பிறவிப் பயன். என்ன? நரகாசுரனை வதம் செய்வதுதான் சத்ய பாமாவின் பிறவிப்பயன் அதைப்போலவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிறவிப் பயன் என்ன? கருணாநிதி என்னும் தீய சக்தியை அழிப்பதும், ஒழிப்பதும்தான் அண்ணா தி.மு.க.வின் பிறவிப் பயன் என்று அந்த அறிக்கையைப் படித்து விட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
திராவிடர் இயக்கத்தின் ஆணி வேரை வெட்டுவதுபோன்ற வெட்டரிவாள் வீச்சு இது!
அசுரன் என்றும், அரக்கன் என்றும் புராணங்களில், இதிகாசங்களில் கூறப்பட்டிருப்பது எல்லாம் திராவிடர்கள் அதில் கூறப்பட்டிருப்பது எல்லாம் ஆரியர் - திராவிடர் போரே!
என்பதுதான் திராவிட இயக்கத்தின் அடிநாதம். வரலாற்று உண்மையும்கூட!
இதன் ஆரம்ப எழுத்தைக் கூடப் புரியாத ஒரு சீமாட்டி என் பெயரையும் திராவிட என்ற வரலாற்றுப் பெயரையும் தாங்கிய கட்சியின் பொதுச் செயலாளர் ஆனதால் ஏற்பட்ட விபரீதம்! விபரீதம்!!
புத்தர் இயக்கத்தில் புகுந்து ஊடுருவி ஆரியம் நாசப்படுத்தியதுபற்றி நான் எழுதாததா? பேசாததா? தந்தை பெரியார் கூறாததா?
இப்படியெல்லாம் சொன்ன இயக்கத்திலேயே ஆரியம் புகுந்து தன் விஷம வேலையைச் செய்து விட்டதே என்று எண்ணுகிறபோது, எதையும் தாங்கும் இதயம் படைத்த எனக்கே நெஞ்சம் வெடித்து விடும் போலி ருக்கிறதே!
இதனை ஏற்றுக்கொண்டு உம் கட்சியில் எப்படியிருக்கிறார்கள்? கொள்கை பற்றித் தெரியாத கூட்டம் உமது பின்னால் நிற்கிறது; - பதவி என்ற தீனியைப் போட்டால் போதும் புரட்சித் தலைவியே! என்று போர்ப் பாட்டுப் பாடுவார்கள் போலும்!
இந்த ஒரே ஒரு அறிக்கை ஒன்று போதும் நீவிர் யார் என்பதற்கு!
இராமன் பக்கமும் கிருஷ்ணன் பக்கமும் நின்று திராவிடர்களை சூத்திரர்களை வீழ்த்துவதற்குப் புறப்பட்ட அணிக்குத் தலைமை தாங்குகிறாய்.
அதனால்தானே சோ இராமசாமிகளும், குருமூர்த்திகளும், தினமணிகளும் தினமலர்களும் கல்கிகளும், இந்துக்களும் உம் தலைமையை ஏற்று அணிவகுத்து நிற்கின்றன.
ஆரிய வெறியின் சனாதனத்தின், மூடநம்பிக்கையின் உச்சக்கட்டத்திலே கட்சியை நகர்த்திச் சென்று விட்டாய், மிகவும் வெளிப்படையாக ஆரிய தி.மு.க.வாக மாற்றி விட்டாய் என்பதற்கு அடையாளமாக உமது ஏட்டில் நாள்தோறும் ராசிபலன் வெளியிட ஆரம்பித்து விட்டாய்.
இது ஓர் உச்சக் கட்டமான முடிவு; கட்சியில் இனி தட்டிக் கேட்க யாராலும் முடியாது என்பதற்கான அறிவிப்பாகத்தான் இதனைக் கருத வேண்டும்.
அப்பட்டமாக அண்ணா தி.மு.க. ஆரிய மயமாகி விட்டது என்பதற்கான பிரகடனமாகத்தான் இதனைக் கருத வேண்டும்.
பார்ப்பனர்களையல்ல பார்ப்பனீ யத்தை எதிர்ப்பதுதான் எங்கள் கொள்கை என்று அறிவித்தது உண்மை தான். உம்மைப் பொறுத்தவரை அந்தப் பிரச்சினைக்கு இடம் இல்லை. பார்ப்பனராகவும் பார்ப்பனீயத்தை திராவிட இயக்கத்தில் திணிக்கும் பேர் வழியாகவும் நீர் ஆகிவிட்டாய். திராவிட இயக்கத்துக்கு இப்படி ஒரு விபத்தா? இது சூத்திரர்களின் அரசு? என்று என் தம்பி கருணாநிதி சட்டப் பேரவையில் அறிவித்தார். அவரை ஒழிப்பதுதான் அ.தி.மு.க.வின் பிறவிப் பயன் என்று பகிரங்கமாக அறிவித்து விட்டாய். அதற்கொப்ப இராமாயணத்தையும் துணைக் கழைத்து விட்டாய்; ஆரியர் - திராவிடர் போராட்டம்தான் அரசியலாக நடக்கிறது என்பதற்கான அதிகாரப்பூர்வமான அப்பட்டமான அறிவிப்பு உமது வாயாலேயே வெளிவந்துவிட்டது!
மானமும் அறிவும் உள்ள தமிழர்கள் சிந்திப்பார்களாக! ஆரியத் தலைமையால் உருவாக்கப்பட்ட இந்த அடிப்படை மோசடியை எதிர்த்து, கொள்கை ரீதியில் வினா தொடுக்க அ.இ.அ.தி.மு.க. வில் ஒரே ஒரு தொண்டன்கூட இல்லாது போய் விட்டாரா என்ற கேள்வியோடு நான் என் பேச்சை முடித்துக் கொள்கிறேன்
(அண்ணா அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் இப்படித்தானே பேசி இருப்பார்?).
மின்சாரம் அவர்கள் 12-2-2011 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை
அண்ணா தி.மு.க. அண்ணாவைக் கொச்சைப்படுத்தலாமா?
1) முதலாவதாக செல்வி ஜெயலலிதா பொதுச் செயலாளராக இருக்கக் கூடிய கட்சியின் பெயர் அண்ணா தி.மு.க. என்பதாகும்.
ராமன் பிரச்சினையில் அண்ணாவின் கொள்கை என்ன என்பதைத் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப செயல்பட வேண்டும்.
இராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்று கூறி டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார் ஆகியோருடன் வாதிட்டு வென்றவர் அறிஞர் அண்ணா.
புலவர் குழந்தையின் இராவண காவியம் எனும் நூலுக்கு முன்னுரை அளித்த அறிஞர் அண்ணா அவர்கள்,
இராமதாசர்களுக்கு இராவண தாசர் விடுக்கும் மறுப்புரையல்ல புலவர் குழந்தை அவர்களின் இராவண காவியம். இராமதாசர்களுக்கு தன்மான தமிழர்தரும் மயக்க நீக்க மருந்து இது. தாசர் நிலைகூடாது தமிழா! இராமதாசர் என்பது ஆரிய தாசராக்குவதற்கே பயன்படும் நண்பா! என்று அறிவுறுத்தவே இராவண காவியம் நூல்.
இராவணகாவியமும், இராமாயணமும் இரண்டும் கற்பனைகளே. முன்னது இராமனைத் தேவனாக்க! இஃது (இராவண காவியம்) இராவணனைத் தேவனாக்க அல்ல - தமிழனாக்க, அதாவது வீரனாக்க என்று அண்ணா எழுதியுள்ளாரே! (மேலும் முக்கிய பகுதிகளை இரண்டாம் பக்கம் காண்க)
அண்ணாவை அவமதிக்கலாமா?
அண்ணா தி.மு.க. என்று கட்சிப் பெயரையும், கொடியில் அண்ணா உருவத்தையும் பொறித்துக் கொண்டு இருக்கும் நிலையில், அண்ணாவின் சிந்தனைக்கும், கொள்கைக் கோட்பாட்டுக்கும் எதிராக அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளராக இருக்கக் கூடிய முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா நடந்து கொள்ளலாமா? இதன்மூலம் அண்ணாவை அவமதிக் கலாமா?
அண்ணா தி.மு.க.வில் அண்ணாவின் கொள்கைக் காக இருக்கும் அக்கட்சித் தொண்டர்கள், முன்னணி யினர் சிந்திப்பார்களா?
ஆரியர் - திராவிடர் போராட்டத்தில் செல்வி ஜெயலலிதா எந்தப் பக்கம்?
(2) இராமாயணம் என்பது ஆரியர் - திராவிடர் போராட்டத்தைச் சித்திரிப்பது என்று பண்டித ஜவகர்லால் நேரு, விவேகானந்தர், பி.டி. சீனிவாசய்யங்கார் போன்ற வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளார்களே -
அப்படியென்றால் முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆரியர் பக்கம் நின்று திராவிடர்கள்மீது போர் தொடுக்கிறாரா?
சூத்திரன் சம்புகன் தவம் இருந்தான் என்பதற்காக ராமன் சம்புகனை வாளால் வெட்டிக் கொன்றானே - அந்த ராமனுக்கு வக்காலத்து வாங்குவதன் மூலம் வருணாசிரம தர்மத்தை ஏற்றுக் கொண்டு விட்டாரா?
அண்ணா என்ற பெயரையும், திராவிட என்ற இனச் சுட்டையும் கட்சியில் வைத்திருக்கும் காரணத்தால் தாய்க் கழகம் என்ற முறையில் திராவிடர் கழகம் இந்த வினாக் களை எழுப்புவதற்கு உரிமையும், கடமையும் பெற்றுள்ளது.
எந்த தொல்பொருள் ஆய்வு கூறியது?
(3) தொல் பொருள் ஆராய்ச்சி கூறுவதாகக் குறிப்பிட்டுள்ளாரே - எந்தத் தொல் பொருள் ஆய்வு 17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் ராமன் பாலம் கட்டினான் என்று கூறியிருந்தது?
முதல் பாலம் கட்டப்பட்டதே எகிப்தில்தானே - நைல் நதியில் அவ்வாறு கட்டப்பட்டது. கி.மு. 2650 இல் என்கிற போது 17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் ராமன் பாலம் கட்டினான் என்பது கடைந்தெடுத்த பொய்யல்லவா!
நாசா மறுத்துவிட்டதே!
அமெரிக்காவின் நாசா சொல்லியிருக்கிறது என்று ஒரு கதையைக் கிளப்பிய நேரத்தில் சேது சமுத்திரத் திட்டத்தின் தலைவர் என்.கே. இரகுபதி நாசாவுக்கு மின்னஞ்சல் மூலம் விளக்கம் கேட்டபோது (26.7.2007) அன்று மாலையே நாசா பதிலையும் அனுப்பவில்லையா?
இந்தியா - இலங்கையிடையே உள்ள ஆதாம் பாலம் இயற்கையான மணல் படிவுகளால் உருவான மணல் திட்டுதான் என்று தெரிவித்து விட்டதே!
இதுபோன்ற மணல் திட்டு இராமேசுவரம் - இலங்கைக்கு இடையே மட்டுமல்ல; ஆஸ்திரேலியா கண்டத்தின் கிழக்கே ஆயிரம் மைல் நீளத்திற்கு மேலாக இருக்கிறதே - அதையும் ராமன்தான் கட்டினானா?
அ.இ.அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை என்ன கூறுகிறது?
அ.இ.அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை என்ன கூறுகிறது?
4) 2001 சட்டப் பேரவைக்கான அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இதே செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டது என்ன?
இந்திய தீபகற்பத்தைச் சுற்றி இதுவரை தொடர்ச் சியான கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கிலிருந்து கடல் வழியாக கிழக்கு நோக்கிக் கப்பல்கள் செல்ல வேண்டுமென்றால், இலங்கையைச் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது.
இதற்குத் தீர்வாக அமைவதுதான் சேது சமுத்திரத் திட்டம், இத்திட்டத்தின்படி ராமேசு வரத்திற்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் உள்ள ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத்திற்குத் தடையாக உள்ள மணல் மேடுகள், பாறைகளை அகற்றி ஆழப்படுத்தும் கால்வாய் அமைப்பதுதான் சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம் (2001 - அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை பக்கம் 83-84).
இந்தப் பகுதியில் தெளிவாகக் காணப்படுவது என்ன?
(அ) சேது சமுத்திரத் திட்டம் தேவையானதுதான்.
(ஆ) இராமேசுவரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையில் உள்ளது ஆடம்ஸ் பிரிட்ஜ் - அது மணல் மேடுகள், பாறைகள்தான் (இராமன் பாலம் அல்ல)
இவ்வளவு தெளிவாக தேர்தல் அறிக்கையில் குறிப் பிட்ட பிறகு, அதற்கு முற்றிலும் எதிராக அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளருக்குத் திடீர் ஞானோதயம் ஏற்பட்டதன் பின்னணி என்ன?
மதச்சார்பின்மையைச் சிதைக்கலாமா?
5) மதச்சார்பின்மை என்பதுதான் இந்தியாவின் அரசமைப்புச் சட்டப்படியான நிலை. இதில் மதவாதத்தைத் திணிப்பது எப்படி சரி?
அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக வந்த நிலையில், அரசு அலுவலகங்களில் உள்ள அனைத்து மத சம்பந்தமான கடவுள் படங்களையும் நீக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பி அரசின் மதச் சார்பின்மை என்னும் கொள்கைக்கு மதிப்பைக் கூட்டினாரே!
அந்த அண்ணா பெயரைத் தாங்கும் கட்சியின் பொதுச் செயலாளர் மதச் சார்பின்மைக்கு விரோதமாக இந்துத்துவாவின் கதாநாயகனான ராமனுக்காகக் கொடி தூக்கலாமா?
வரலாறு என்பது வேறு - இதிகாச புராணங்கள் என்பது வேறு. இரண்டும் ஒன்றல்ல. இந்த நிலையில் இதிகாசங்களையும் புராணங்களையும் விஞ்ஞான ரீதியான ஒரு திட்டத்தில் திணித்துத் தடை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியுமா?
விஞ்ஞான மனப்பான்மையை வளர்ப்பது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனி(ளி)ன் கடமை என்று கூறுகிறது இந்திய அரசமைப்புச் சட்டம் (51ஏ(எச்).
இந்த நிலையில் விஞ்ஞான மனப்பான்மைக்கு எதிராக நடந்து கொள்வது சட்டப்படியாகவே குற்றமாயிற்றே!
மாநில அரசோ, மத்திய அரசோ, நீதிமன்றமோ விஞ்ஞான மனப்பான்மைக்கு விரோதமாக சிந்திக்க முடியுமா? செயல்படத்தான் முடியுமா?
வழிபாட்டுத்தலம் 25 கி.மீ. இருக்க முடியுமா?
(6) இதே உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ரவீந்திரன், பன்சால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இவ்வழக்கு வந்தபோது நீதியரசர் ரவீந்திரன் அவர்களால் எழுப்பப் பட்ட வினாக்கள் முக்கியமானவை.
நாம் பூமியைத் தாயாக வணங்குகிறோம். அதனால் அதனைத் தொட முடியாது என்று அர்த்தமல்ல. இமய மலையை நாம் வணங்குகிறோம். அதனால் இமால யத்தைத் தொட முடியாது என்று அர்த்தம் அல்ல.
கோவர்த்தன மலையை நாம் வணங்குகிறோம், அதனால் கோவர்த்தன மலையை எதுவும் செய்ய முடியாது என்று அர்த்தமா? என்ற வினாக்களை எழுப்பிய நீதியரசர் ரவீந்திரன் இன்னொரு அர்த்தமிக்க வினாவையும் தொடுத்தாரே -
ஒரு வழிபாட்டுத்தலம் 25 கி.மீ. நீளத்திற்கு இருக்குமா? என்பதுதான் அந்த மில்லியன் டாலர் கேள்வியாகும். இந்த அறிவார்ந்த வினாவுக்கு ஜெயலலிதாவோ, சு.சாமியோ, அவர்கள் சார்பில் வாதிட்ட வழக்குரை ஞர்களோ, பி.ஜே.பி. உள்ளிட்ட சங்பரிவார்க் கூட்டமோ இதுவரை பதில் சொன்னதுண்டா?
ராமராஜ்ஜியம் உருவாக்கத் துடிக்கும் கும்பல்!
ராமராஜ்ஜியத்தை உருவாக்கப் போகிறோம் என்றுகூறிக் கொண்டு அலைகிற கூட்டத்தின் பிரதிபிம்பமாகவும், மதச் சார்பின்மைக்கு விரோதமாகவும் திராவிட இயக்கக் கொள்கைகளுக்கு எதிராகவும் தமிழக முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா சிந்திக்கிறார் - செயல்படுகிறார் என்பதற்கு அடையாளம்தான் பிரதம ருக்கு இவர் எழுதிய அதிகாரபூர்வமான கடிதம் ஆகும்.
பிரதமருக்குத் தந்தி கொடுங்கள்!
இந்த நிலையில் கழகத் தோழர்களே, திராவிட இயக்கச் சிந்தனையாளர்களே, பகுத்தறிவாளர்களே, அறிவியல் சிந்தனை கொண்டோரே, மதச் சார்பின்மைக் கொள்கையில் நம்பிக்கை கொண்ட நண்பர்களே, கட்சிகளைக் கடந்து தமிழக முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதத்திற்கு இசைவு தரக் கூடாது - மதச் சார்பற்ற தன்மையோடு மத்திய அரசு செயல்பட வேண்டும் என்று பொருள்படும்படியாக தந்திகளை இலட்சக்கணக்கில் பிரதமருக்கு அனுப்பி வையுங்கள் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
மதச் சார்பற்ற கொள்கையுடைய அத்தனைக் கட்சித் தலைவர்களும் கண்டித்து அறிக்கை கொடுக்க வேண்டும். அகில இந்திய அளவிலும் பிரதமருக்குக் கடிதங்களை எழுத வேண்டும்.
இதில் நாம் நமது கடமையைச் செய்யாவிட்டால், ராம ராஜ்ஜியத்தை உருவாக்குவோம் என்று புறப்பட்டுள்ள மனுதர்மவாதிகளுக்கு வலிமையை உண்டாக்கிக் கொடுக்கிறோம் என்று பொருள்.
மதச்சார்பின்மையைக் காப்போம்!
பாபர் மசூதியை இடித்தது சரிதான் என்பதற்கு இசைவு கொடுத்து விட்டோம் என்று பொருளாகும். இதனைத் தடுத்தே தீர வேண்டும்.
மதவெறி மாய்ப்போம்!
மனிதநேயம் காப்போம்!
மதச் சார்பின்மையைக் கட்டுவோம்!!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
என் பெயரால் ஒரு கட்சி - அண்ணா திமுக; என் உருவம் தாங்கிய கொடி _ அ.இ.அ.தி. மு.க. கொடி; அதற்கென்று ஒரு பத்திரிகை டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.
தோலைக் கடித்து, துருத்தியைக் கடித்து, ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனைக் கடித்த கதை கண்டு திடுக்கிட்டுப் போனேன். மண் சோறு சாப்பிட்டீர்கள். மாள முடியாத பசி போலும் என்று நினைத்தேன். யாகம் நடத்தியதாகக் கேள்விப்பட்டேன். தோட்டத்துக்குள்தானே _ தனி நபர் பிரச்னை என்று தள்ளி விட்டேன்.
சித்ரா பவுர்ணமியன்று வீட்டில் விளக் கேற்றி இருளை விரட்டுங்கள் என்று வெளி வந்த ஓர் அறிக்கையைப் பார்த்துத் தலையில் அடித்துக் கொண்டேன்.
விநாயக சதுர்த்திற்கு வாழ்த்துத் தெரி வித்தாய்; நான் எழுதிய களி மண்ணும் கையுமாக (திராவிட நாடு 12.9.1942) என்ற கட்டுரையைப் படிந்திருந்தால் அல்லவா - இந்த வாழ்த்தை எழுதும்போது தயக்கம் ஏற்பட்டு இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்திற்காக எத்தனை எத்தனைக் கூட்டங்களில் பேசி இருப்பேன், எத்தனை எத்தனை கட்டுரைகளை எழுதித் தள்ளியிருப்பேன்! - மாநாடுகள் கூட்டித் தீர்மானங்களை நிறைவேற்றியிருப்பேன், பேரணிகளை நடத்தியிருப்பேன் - போராட்டங்களை நடத்தியிருப்பேன்!
அந்தச் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்ற என் பெயரை வைத்துக் கொண்ட கட்சியின் பொதுச் செயலாளர் உச்சநீதிமன்றம் சென்று தடை வாங்குகிறார் என்றால் தலையில்தான் அடித்துக் கொள்ள வேண்டியவன் ஆனேன். ராமர் பாலமாம். அதை இடித்தால் இந்துக்கள் மனம் புண்படுமாம். அட தங்கச்சி! என் பெயரைக் கட்சியின் பெயரில் வைத்துக் கொண்டா இந்த மோசடியைச் செய்ய வேண்டும்?
இராமாயணத்தைப் பற்றி தந்தை பெரியாரும், நானும் எழுதியதை, பேசியதைப் படித்து பார்த்ததுண்டா, அந்த நூல்களைக் கையால் தொட்டதுதான் உண்டா?
இரா.பி. சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார் ஆகியோருடன் இராமாயணத்தைக் கொளுத்துவது குறித்து நான் விவாதம் செய்த வரலாறு உமக்குத் தெரியுமா? நீதிதேவன் மயக்கம் கேள்விப்பட்டதுண்டா?
வரலாறு தெரிந்தவர்கள் யாராவது உமது பக்கத்தில் வைத்துக் கொண்டதுண்டா?
இராமாயணம் என்பது ஆரியர் திராவிடர் போராட்டம் என்பதுபற்றியெல்லாம் ஏதாவது தெரியுமா?
உமக்கு எப்படித் தெரியும்? அப்படியே தெரிந்தாலும் நீ ஆரியத்தின் பக்கத்தில்தானே நிற்பாய்? அந்த அடிப்படையில் தான் இராமன் பாலத்தை இடித்து சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று வழக்குத் தொடுத்திருப்பாயோ?
தங்கச்சி, உன் அறிக்கை ஒன்றை உமது கட்சி ஏட்டில் (29.10.2009 _ நமது எம்.ஜி.ஆர். பக்கம் 1-9) படித்துப் பார்த்தேன்.
ஒவ்வொரு பிறப்பிற்கும் ஒரு அர்த்தம் உண்டு. ராமர் பிறந்தார். ராமரின் பிறவிப் பயன் என்ன? தீய சக்தியான ராவணனை அழிப்பது தான். ராமனின் பிறவிப் பயன் கிருஷ்ணன் பிறந்தார். கிருஷ்ணனுடைய பிறவிப் பயன் என்ன? கம்சன் என்னும் அரக்கனை ஒழிப்பது தான் _ அழிப்பதுதான். கிருஷ்ணரின் பிறவிப் பயன். சத்ய பாமாவின் பிறவிப் பயன். என்ன? நரகாசுரனை வதம் செய்வதுதான் சத்ய பாமாவின் பிறவிப்பயன் அதைப்போலவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிறவிப் பயன் என்ன? கருணாநிதி என்னும் தீய சக்தியை அழிப்பதும், ஒழிப்பதும்தான் அண்ணா தி.மு.க.வின் பிறவிப் பயன் என்று அந்த அறிக்கையைப் படித்து விட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
திராவிடர் இயக்கத்தின் ஆணி வேரை வெட்டுவதுபோன்ற வெட்டரிவாள் வீச்சு இது!
அசுரன் என்றும், அரக்கன் என்றும் புராணங்களில், இதிகாசங்களில் கூறப்பட்டிருப்பது எல்லாம் திராவிடர்கள் அதில் கூறப்பட்டிருப்பது எல்லாம் ஆரியர் - திராவிடர் போரே!
என்பதுதான் திராவிட இயக்கத்தின் அடிநாதம். வரலாற்று உண்மையும்கூட!
இதன் ஆரம்ப எழுத்தைக் கூடப் புரியாத ஒரு சீமாட்டி என் பெயரையும் திராவிட என்ற வரலாற்றுப் பெயரையும் தாங்கிய கட்சியின் பொதுச் செயலாளர் ஆனதால் ஏற்பட்ட விபரீதம்! விபரீதம்!!
புத்தர் இயக்கத்தில் புகுந்து ஊடுருவி ஆரியம் நாசப்படுத்தியதுபற்றி நான் எழுதாததா? பேசாததா? தந்தை பெரியார் கூறாததா?
இப்படியெல்லாம் சொன்ன இயக்கத்திலேயே ஆரியம் புகுந்து தன் விஷம வேலையைச் செய்து விட்டதே என்று எண்ணுகிறபோது, எதையும் தாங்கும் இதயம் படைத்த எனக்கே நெஞ்சம் வெடித்து விடும் போலி ருக்கிறதே!
இதனை ஏற்றுக்கொண்டு உம் கட்சியில் எப்படியிருக்கிறார்கள்? கொள்கை பற்றித் தெரியாத கூட்டம் உமது பின்னால் நிற்கிறது; - பதவி என்ற தீனியைப் போட்டால் போதும் புரட்சித் தலைவியே! என்று போர்ப் பாட்டுப் பாடுவார்கள் போலும்!
இந்த ஒரே ஒரு அறிக்கை ஒன்று போதும் நீவிர் யார் என்பதற்கு!
இராமன் பக்கமும் கிருஷ்ணன் பக்கமும் நின்று திராவிடர்களை சூத்திரர்களை வீழ்த்துவதற்குப் புறப்பட்ட அணிக்குத் தலைமை தாங்குகிறாய்.
அதனால்தானே சோ இராமசாமிகளும், குருமூர்த்திகளும், தினமணிகளும் தினமலர்களும் கல்கிகளும், இந்துக்களும் உம் தலைமையை ஏற்று அணிவகுத்து நிற்கின்றன.
ஆரிய வெறியின் சனாதனத்தின், மூடநம்பிக்கையின் உச்சக்கட்டத்திலே கட்சியை நகர்த்திச் சென்று விட்டாய், மிகவும் வெளிப்படையாக ஆரிய தி.மு.க.வாக மாற்றி விட்டாய் என்பதற்கு அடையாளமாக உமது ஏட்டில் நாள்தோறும் ராசிபலன் வெளியிட ஆரம்பித்து விட்டாய்.
இது ஓர் உச்சக் கட்டமான முடிவு; கட்சியில் இனி தட்டிக் கேட்க யாராலும் முடியாது என்பதற்கான அறிவிப்பாகத்தான் இதனைக் கருத வேண்டும்.
அப்பட்டமாக அண்ணா தி.மு.க. ஆரிய மயமாகி விட்டது என்பதற்கான பிரகடனமாகத்தான் இதனைக் கருத வேண்டும்.
பார்ப்பனர்களையல்ல பார்ப்பனீ யத்தை எதிர்ப்பதுதான் எங்கள் கொள்கை என்று அறிவித்தது உண்மை தான். உம்மைப் பொறுத்தவரை அந்தப் பிரச்சினைக்கு இடம் இல்லை. பார்ப்பனராகவும் பார்ப்பனீயத்தை திராவிட இயக்கத்தில் திணிக்கும் பேர் வழியாகவும் நீர் ஆகிவிட்டாய். திராவிட இயக்கத்துக்கு இப்படி ஒரு விபத்தா? இது சூத்திரர்களின் அரசு? என்று என் தம்பி கருணாநிதி சட்டப் பேரவையில் அறிவித்தார். அவரை ஒழிப்பதுதான் அ.தி.மு.க.வின் பிறவிப் பயன் என்று பகிரங்கமாக அறிவித்து விட்டாய். அதற்கொப்ப இராமாயணத்தையும் துணைக் கழைத்து விட்டாய்; ஆரியர் - திராவிடர் போராட்டம்தான் அரசியலாக நடக்கிறது என்பதற்கான அதிகாரப்பூர்வமான அப்பட்டமான அறிவிப்பு உமது வாயாலேயே வெளிவந்துவிட்டது!
மானமும் அறிவும் உள்ள தமிழர்கள் சிந்திப்பார்களாக! ஆரியத் தலைமையால் உருவாக்கப்பட்ட இந்த அடிப்படை மோசடியை எதிர்த்து, கொள்கை ரீதியில் வினா தொடுக்க அ.இ.அ.தி.மு.க. வில் ஒரே ஒரு தொண்டன்கூட இல்லாது போய் விட்டாரா என்ற கேள்வியோடு நான் என் பேச்சை முடித்துக் கொள்கிறேன்
(அண்ணா அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் இப்படித்தானே பேசி இருப்பார்?).
மின்சாரம் அவர்கள் 12-2-2011 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை
அண்ணா தி.மு.க. அண்ணாவைக் கொச்சைப்படுத்தலாமா?
1) முதலாவதாக செல்வி ஜெயலலிதா பொதுச் செயலாளராக இருக்கக் கூடிய கட்சியின் பெயர் அண்ணா தி.மு.க. என்பதாகும்.
ராமன் பிரச்சினையில் அண்ணாவின் கொள்கை என்ன என்பதைத் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப செயல்பட வேண்டும்.
இராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்று கூறி டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார் ஆகியோருடன் வாதிட்டு வென்றவர் அறிஞர் அண்ணா.
புலவர் குழந்தையின் இராவண காவியம் எனும் நூலுக்கு முன்னுரை அளித்த அறிஞர் அண்ணா அவர்கள்,
இராமதாசர்களுக்கு இராவண தாசர் விடுக்கும் மறுப்புரையல்ல புலவர் குழந்தை அவர்களின் இராவண காவியம். இராமதாசர்களுக்கு தன்மான தமிழர்தரும் மயக்க நீக்க மருந்து இது. தாசர் நிலைகூடாது தமிழா! இராமதாசர் என்பது ஆரிய தாசராக்குவதற்கே பயன்படும் நண்பா! என்று அறிவுறுத்தவே இராவண காவியம் நூல்.
இராவணகாவியமும், இராமாயணமும் இரண்டும் கற்பனைகளே. முன்னது இராமனைத் தேவனாக்க! இஃது (இராவண காவியம்) இராவணனைத் தேவனாக்க அல்ல - தமிழனாக்க, அதாவது வீரனாக்க என்று அண்ணா எழுதியுள்ளாரே! (மேலும் முக்கிய பகுதிகளை இரண்டாம் பக்கம் காண்க)
அண்ணாவை அவமதிக்கலாமா?
அண்ணா தி.மு.க. என்று கட்சிப் பெயரையும், கொடியில் அண்ணா உருவத்தையும் பொறித்துக் கொண்டு இருக்கும் நிலையில், அண்ணாவின் சிந்தனைக்கும், கொள்கைக் கோட்பாட்டுக்கும் எதிராக அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளராக இருக்கக் கூடிய முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா நடந்து கொள்ளலாமா? இதன்மூலம் அண்ணாவை அவமதிக் கலாமா?
அண்ணா தி.மு.க.வில் அண்ணாவின் கொள்கைக் காக இருக்கும் அக்கட்சித் தொண்டர்கள், முன்னணி யினர் சிந்திப்பார்களா?
ஆரியர் - திராவிடர் போராட்டத்தில் செல்வி ஜெயலலிதா எந்தப் பக்கம்?
(2) இராமாயணம் என்பது ஆரியர் - திராவிடர் போராட்டத்தைச் சித்திரிப்பது என்று பண்டித ஜவகர்லால் நேரு, விவேகானந்தர், பி.டி. சீனிவாசய்யங்கார் போன்ற வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளார்களே -
அப்படியென்றால் முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆரியர் பக்கம் நின்று திராவிடர்கள்மீது போர் தொடுக்கிறாரா?
சூத்திரன் சம்புகன் தவம் இருந்தான் என்பதற்காக ராமன் சம்புகனை வாளால் வெட்டிக் கொன்றானே - அந்த ராமனுக்கு வக்காலத்து வாங்குவதன் மூலம் வருணாசிரம தர்மத்தை ஏற்றுக் கொண்டு விட்டாரா?
அண்ணா என்ற பெயரையும், திராவிட என்ற இனச் சுட்டையும் கட்சியில் வைத்திருக்கும் காரணத்தால் தாய்க் கழகம் என்ற முறையில் திராவிடர் கழகம் இந்த வினாக் களை எழுப்புவதற்கு உரிமையும், கடமையும் பெற்றுள்ளது.
எந்த தொல்பொருள் ஆய்வு கூறியது?
(3) தொல் பொருள் ஆராய்ச்சி கூறுவதாகக் குறிப்பிட்டுள்ளாரே - எந்தத் தொல் பொருள் ஆய்வு 17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் ராமன் பாலம் கட்டினான் என்று கூறியிருந்தது?
முதல் பாலம் கட்டப்பட்டதே எகிப்தில்தானே - நைல் நதியில் அவ்வாறு கட்டப்பட்டது. கி.மு. 2650 இல் என்கிற போது 17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் ராமன் பாலம் கட்டினான் என்பது கடைந்தெடுத்த பொய்யல்லவா!
நாசா மறுத்துவிட்டதே!
அமெரிக்காவின் நாசா சொல்லியிருக்கிறது என்று ஒரு கதையைக் கிளப்பிய நேரத்தில் சேது சமுத்திரத் திட்டத்தின் தலைவர் என்.கே. இரகுபதி நாசாவுக்கு மின்னஞ்சல் மூலம் விளக்கம் கேட்டபோது (26.7.2007) அன்று மாலையே நாசா பதிலையும் அனுப்பவில்லையா?
இந்தியா - இலங்கையிடையே உள்ள ஆதாம் பாலம் இயற்கையான மணல் படிவுகளால் உருவான மணல் திட்டுதான் என்று தெரிவித்து விட்டதே!
இதுபோன்ற மணல் திட்டு இராமேசுவரம் - இலங்கைக்கு இடையே மட்டுமல்ல; ஆஸ்திரேலியா கண்டத்தின் கிழக்கே ஆயிரம் மைல் நீளத்திற்கு மேலாக இருக்கிறதே - அதையும் ராமன்தான் கட்டினானா?
அ.இ.அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை என்ன கூறுகிறது?
அ.இ.அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை என்ன கூறுகிறது?
4) 2001 சட்டப் பேரவைக்கான அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இதே செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டது என்ன?
இந்திய தீபகற்பத்தைச் சுற்றி இதுவரை தொடர்ச் சியான கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கிலிருந்து கடல் வழியாக கிழக்கு நோக்கிக் கப்பல்கள் செல்ல வேண்டுமென்றால், இலங்கையைச் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது.
இதற்குத் தீர்வாக அமைவதுதான் சேது சமுத்திரத் திட்டம், இத்திட்டத்தின்படி ராமேசு வரத்திற்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் உள்ள ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத்திற்குத் தடையாக உள்ள மணல் மேடுகள், பாறைகளை அகற்றி ஆழப்படுத்தும் கால்வாய் அமைப்பதுதான் சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம் (2001 - அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை பக்கம் 83-84).
இந்தப் பகுதியில் தெளிவாகக் காணப்படுவது என்ன?
(அ) சேது சமுத்திரத் திட்டம் தேவையானதுதான்.
(ஆ) இராமேசுவரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையில் உள்ளது ஆடம்ஸ் பிரிட்ஜ் - அது மணல் மேடுகள், பாறைகள்தான் (இராமன் பாலம் அல்ல)
இவ்வளவு தெளிவாக தேர்தல் அறிக்கையில் குறிப் பிட்ட பிறகு, அதற்கு முற்றிலும் எதிராக அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளருக்குத் திடீர் ஞானோதயம் ஏற்பட்டதன் பின்னணி என்ன?
மதச்சார்பின்மையைச் சிதைக்கலாமா?
5) மதச்சார்பின்மை என்பதுதான் இந்தியாவின் அரசமைப்புச் சட்டப்படியான நிலை. இதில் மதவாதத்தைத் திணிப்பது எப்படி சரி?
அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக வந்த நிலையில், அரசு அலுவலகங்களில் உள்ள அனைத்து மத சம்பந்தமான கடவுள் படங்களையும் நீக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பி அரசின் மதச் சார்பின்மை என்னும் கொள்கைக்கு மதிப்பைக் கூட்டினாரே!
அந்த அண்ணா பெயரைத் தாங்கும் கட்சியின் பொதுச் செயலாளர் மதச் சார்பின்மைக்கு விரோதமாக இந்துத்துவாவின் கதாநாயகனான ராமனுக்காகக் கொடி தூக்கலாமா?
வரலாறு என்பது வேறு - இதிகாச புராணங்கள் என்பது வேறு. இரண்டும் ஒன்றல்ல. இந்த நிலையில் இதிகாசங்களையும் புராணங்களையும் விஞ்ஞான ரீதியான ஒரு திட்டத்தில் திணித்துத் தடை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியுமா?
விஞ்ஞான மனப்பான்மையை வளர்ப்பது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனி(ளி)ன் கடமை என்று கூறுகிறது இந்திய அரசமைப்புச் சட்டம் (51ஏ(எச்).
இந்த நிலையில் விஞ்ஞான மனப்பான்மைக்கு எதிராக நடந்து கொள்வது சட்டப்படியாகவே குற்றமாயிற்றே!
மாநில அரசோ, மத்திய அரசோ, நீதிமன்றமோ விஞ்ஞான மனப்பான்மைக்கு விரோதமாக சிந்திக்க முடியுமா? செயல்படத்தான் முடியுமா?
வழிபாட்டுத்தலம் 25 கி.மீ. இருக்க முடியுமா?
(6) இதே உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ரவீந்திரன், பன்சால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இவ்வழக்கு வந்தபோது நீதியரசர் ரவீந்திரன் அவர்களால் எழுப்பப் பட்ட வினாக்கள் முக்கியமானவை.
நாம் பூமியைத் தாயாக வணங்குகிறோம். அதனால் அதனைத் தொட முடியாது என்று அர்த்தமல்ல. இமய மலையை நாம் வணங்குகிறோம். அதனால் இமால யத்தைத் தொட முடியாது என்று அர்த்தம் அல்ல.
கோவர்த்தன மலையை நாம் வணங்குகிறோம், அதனால் கோவர்த்தன மலையை எதுவும் செய்ய முடியாது என்று அர்த்தமா? என்ற வினாக்களை எழுப்பிய நீதியரசர் ரவீந்திரன் இன்னொரு அர்த்தமிக்க வினாவையும் தொடுத்தாரே -
ஒரு வழிபாட்டுத்தலம் 25 கி.மீ. நீளத்திற்கு இருக்குமா? என்பதுதான் அந்த மில்லியன் டாலர் கேள்வியாகும். இந்த அறிவார்ந்த வினாவுக்கு ஜெயலலிதாவோ, சு.சாமியோ, அவர்கள் சார்பில் வாதிட்ட வழக்குரை ஞர்களோ, பி.ஜே.பி. உள்ளிட்ட சங்பரிவார்க் கூட்டமோ இதுவரை பதில் சொன்னதுண்டா?
ராமராஜ்ஜியம் உருவாக்கத் துடிக்கும் கும்பல்!
ராமராஜ்ஜியத்தை உருவாக்கப் போகிறோம் என்றுகூறிக் கொண்டு அலைகிற கூட்டத்தின் பிரதிபிம்பமாகவும், மதச் சார்பின்மைக்கு விரோதமாகவும் திராவிட இயக்கக் கொள்கைகளுக்கு எதிராகவும் தமிழக முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா சிந்திக்கிறார் - செயல்படுகிறார் என்பதற்கு அடையாளம்தான் பிரதம ருக்கு இவர் எழுதிய அதிகாரபூர்வமான கடிதம் ஆகும்.
பிரதமருக்குத் தந்தி கொடுங்கள்!
இந்த நிலையில் கழகத் தோழர்களே, திராவிட இயக்கச் சிந்தனையாளர்களே, பகுத்தறிவாளர்களே, அறிவியல் சிந்தனை கொண்டோரே, மதச் சார்பின்மைக் கொள்கையில் நம்பிக்கை கொண்ட நண்பர்களே, கட்சிகளைக் கடந்து தமிழக முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதத்திற்கு இசைவு தரக் கூடாது - மதச் சார்பற்ற தன்மையோடு மத்திய அரசு செயல்பட வேண்டும் என்று பொருள்படும்படியாக தந்திகளை இலட்சக்கணக்கில் பிரதமருக்கு அனுப்பி வையுங்கள் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
மதச் சார்பற்ற கொள்கையுடைய அத்தனைக் கட்சித் தலைவர்களும் கண்டித்து அறிக்கை கொடுக்க வேண்டும். அகில இந்திய அளவிலும் பிரதமருக்குக் கடிதங்களை எழுத வேண்டும்.
இதில் நாம் நமது கடமையைச் செய்யாவிட்டால், ராம ராஜ்ஜியத்தை உருவாக்குவோம் என்று புறப்பட்டுள்ள மனுதர்மவாதிகளுக்கு வலிமையை உண்டாக்கிக் கொடுக்கிறோம் என்று பொருள்.
மதச்சார்பின்மையைக் காப்போம்!
பாபர் மசூதியை இடித்தது சரிதான் என்பதற்கு இசைவு கொடுத்து விட்டோம் என்று பொருளாகும். இதனைத் தடுத்தே தீர வேண்டும்.
மதவெறி மாய்ப்போம்!
மனிதநேயம் காப்போம்!
மதச் சார்பின்மையைக் கட்டுவோம்!!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment