10.5% #வன்னியர்உள்ஒதுக்கீட்டால்சீர்மரபினர்இதரமிகவும்பிற்பட்டோருக்கு_பாதிப்பா?

     சீர் மரபினர் நல சங்கத் தலைவர் கார்த்திக் ராஜா என்பவர் வன்னியருக்கு 10.5% உள் ஒதுக்கீடூ தந்துள்ளதால், மீதி 115 ஜாதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, வேறு எந்த ஜாதியுமே குறை கூறாத நிலையில், தானே வலியச் சென்று அவற்றை இணைத்து, மற்ற அனைவரையும் வன்னியருக்கு எதிராகத் திருப்பும்
"நயவஞ்சகச் செயலில்" ஈடுபட்டுள்ளார்.

  அவருக்கு வடதமிழ்நாடு மக்கள் இயக்கத்தின் பதில்.

எம்.பி.சி பட்டியலில், வன்னியர் எண்ணிக்கை மட்டும்- 65,04,855.

அப்பட்டியலில் உள்ள இதர
115 ஜாதிகளின் மொத்த எண்ணிக்கை              - 56,04,218

  இது, வன்னியரை விட 7 லட்சம் குறைவு.

  இதனால்தான், வன்னியருக்கு 10.5% உள் ஒதுக்கீடும், இதர ஜாதியினருக்கு 9.5% -உம் ஒதுக்கப்படுள்ளன.

   இந்த அடிப்படையைக் கூட தெரிந்து கொள்ளாமல், அடிப்படை  அறிவு கூட இல்லாமல், முழுக்க
கள்ளர் ஜாதி வன்மத்துடன், ஆதிக்க ஜாதி காழ்ப்புணர்ச்சியில் வன்னியர் மீது "விஷம் கக்குகிறார்" கார்த்திக் ராஜா!

    கார்த்திக் ராஜா கூறும் சீர் மரபினரில் மொத்தம் உள்ள 68 ஜாதிகளும் தனித்தனி ஜாதிகளா? என்பதை முதலில் ஆராய்வோம்.

   முக்குலத்தோரில் குற்றப்பரம்பரையாகக் கூறப்பட்ட
1. கூத்தப்பார் கள்ளர்
2. சூரியூர் கள்ளர்
3. கந்தர்வ கோட்டை கள்ளர்
4.பிரமலைக் கள்ளர்

  என்ற நால்வரும் 4 தனித்தனி ஜாதிகளாகக் காட்டப்பட்டுள்ளன.

 அதே போல, அதே சமூகத்தைச் சேர்ந்த மறவர்கள்,
1. மறவர்
2. செம்பநாட்டு மறவர்கள்
3. ஆப்பநாட்டு கொண்டயம்கோட்டை மறவர்.

என்ற  3 உட்பிரிவுகளும் தனித்தனி ஜாதிகளாகக் காட்டப்பட்டுள்ளன.

   குறவர் மட்டும் 22 உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

  முத்தரையர்கள் மட்டும் 6 உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.

‌ இவை அனைத்தும் தனித்தனி ஜாதிகளா?

    இவர்கள் ஒருவருக்கு ஒருவர் மண உறவு கொள்ளாமல் தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்களா?

68 சீர்மரபினர் ஜாதிகளில்,
100- க்கும் குறைவான மக்கள் தொகை கொண்டவை.       -04

500- க்கும் குறைவான மக்கள் தொகை கொண்டவை       -10

1000- க்கும்குறைவான மக்கள் தொகை கொண்டவை        -12

மொத்தம்                               -26

   இவற்றை எல்லாம், தனித்தனி ஜாதிகளாகக் காட்டுவது ஊரை ஏமாற்றும் செயலாகும்.

     20% எம்.பி.சி இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட 1989 முதல், 2008- வரை 17 ஆண்டு காலத்தில் 62 சீர்மரபு ஜாதியினரில்,

1. கந்தர்வக்கோட்டை கள்ளர்
2. பிரமலய்க் கள்ளர்
3. மறவர்
4. ஊராளி கவுண்டர்

  என்ற நான்கே ஜாதிகள் மட்டுமே
டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு மனுக்கள் அனுப்பி தேர்வாகி உள்ளனர்.

  ஊராளி கவுண்டர் முத்தரையரில் ஒரு உட்பிரிவாகும்.

  மற்ற மூன்றும் முக்குலத்தோர் என்ள ஒரே ஜாதியின் உட்பிரிவுகளே!

    மற்ற 64 ஜாதிகளும் பயனடையாதவை.

   இதை கூர்ந்து கவனித்தால், இந்த ஜாதிகள் ஒன்று உண்மையிலேயே நடைமுறையில் இல்லை.

     அல்லது வேறு பெயர்களில் பயனடைந்து இவற்றை கைவிட்டுவிட்டார்கள்.

      வெள்ளையன் குப்பம், தென்னூர் படையாட்சிகள் என்ற உட்பிரிவு இருந்தும் கடந்த 17 ஆண்டில் ஒருவர் கூட அதிலிருந்து விண்ணப்பிக்கவில்லை.

  அப்படி என்றால் என்ன பொருள்?

 அவர்கள், அனைவரும் "இந்து- படையாட்சி" என சான்று பெற்று மற்ற வன்னியர்களுனுடையே சேர்ந்து பயன் பெற்று வருகிறார்கள் என்பதாகும்.

  இப்படி ஆளே இல்லாத 64 ஜாதிகளைக் காட்டி,
வன்னியர் உள் ஒதுக்கீட்டால், மற்ற அனைத்து ஜாதிகளும் பாதிக்கப்படுவதாக "ஊளையிடுவது" எந்த வகையில் நியாயமான செயல் கார்த்திக் ராஜா?

No comments:

Post a Comment