விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் மாசி தேர்த் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் ஆலய மாசி பெருவிழா 20-ம் தேதி மகா சிவராத்தி தினத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 21-ம் தேதி மயானாக் கொள்ளை திருவிழாவும், 24-ம் தேதி தீ மிதி விழாவும் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் உற்சவம் நடைபெற்றது. தேர் உற்சவத்தை முன்னிட்டு அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
அம்மன் மலர் அலங்காரத்துடன் தேரில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். லட்சகணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஊர்காவல் படையினர், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.
No comments:
Post a Comment